• Breaking News

    கோம்பை ஸ்ரீ அய்யனார்,ஸ்ரீ பால நாகம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா

     


    தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் கோம்பையில் சிவகோத்திரம் தூங்கன் வீட்டார் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ அய்யனார்,ஸ்ரீ பால நாகம்மாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.முன்னதாக,அனுக்ஞை விநாயகர் பூஜை, நவக்கிரக ஹோமம் மகாலட்சுமி ஹோமம்-கோமாதா பூஜை பூரணாஹுதி,அதனைத் தொடர்ந்து யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டு கும்ப கலசத்திற்கு புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை சிவகோத்திரம் தூங்கன் வீட்டார் பங்காளிகள் செய்திருந்தனர்.விழாவில் கோம்பை,தேவாரம் உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    No comments