• Breaking News

    நாகப்பட்டினம்: குருப்-IV தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்


    நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பாகோவில் ஐசக் நியூட்டன் கல்லூரி மற்றும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெறும் குருப்-IV அடங்கிய பணிகளுக்கான தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி ஐஏ-ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வில்; 42 தேர்வு மையங்களில் 13,163 நபர்கள் தேர்வு எழுத பதிவு செய்தவர்களில் 11184 நபர்கள் தேர்வு எழுதினர். 1979 நபர்கள் தேர்வு எழுதவில்லை. இத்தேர்வு சிறப்பாக நடைபெற 50 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 4 பறக்கும்படை அலுவலர்களும், 14 சுற்றுக்குழு அலுவலர்களும், 50 ஆய்வு அலுவலர்களும், 4 கண்காணிப்பு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

    தேர்வில் கலந்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தேர்வு எழுத மாற்று வசதியும் மற்றும் பார்வையற்றோர் தேர்வு எழுதிட மாற்று நபர் மற்றும் தனி அறைகள் கொண்ட வசதி ஒவ்வொரு மையத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் தனித்தனியாக பாதுகாப்புப் பணியில் காவலர்கள் நியமணம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையத்திற்கு வருகை தர ஏதுவாக எவ்வித இடையூறும் ஏற்படா வண்ணம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து பகுதிகளிலும் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்துள்ளார்.

    No comments