குத்தாலம் மகா காளியம்மன் ஆலய பால்குட திருவிழா...... பக்தர்கள் 16 அடி நீல அழகை வாயில் குத்தியபடி சென்றது காண்போரை பக்தி பரவசமடையச் செய்தது......
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள மகாகாளியம்மன் திருக்கோயிலில் பால்குடம் மற்றும் காவடி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.முன்னதாக விரதம் இருந்த திரளான பக்தர்கள் காவிரி தீர்த்த படித்துறையி்லிருந்து வான வேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க சக்திகரகம் பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு ஆண் பக்தர்கள் 16 அடி நீள அழகை வாயில் குத்தியபடி முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக ஆலயத்தை வந்து அடைந்தனர் பின்னர் பக்தர்கள் தலையில் சுமந்து வந்த பாலினை கொண்டு அம்மனுக்கு பாலாபிஷேகமும் தொடர்ந்து மகா தீபராதனையும் காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காளியம்மனை வழிபட்டு சென்றனர் இரவு ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
No comments