கும்மிடிப்பூண்டி: கவரப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இது எப்படி இருக்கு கவிதை நூலை சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் வெளியிட்டார்


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கவரப்பேட்டை அரசினர் பள்ளியில்  79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கவிஞர் ஆசிரியர்.மு.இளங்கோ அருள் எழுதிய இது எப்படி இருக்கு கவிதை நூலை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

 இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஐயப்பன் பேராசிரியர் தமிழ் சுடர் விஜயரங்கன். முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர் மணிபாலன்,  மாவட்ட பொருளாளர் ரமேஷ்,பொதுக்குழு உறுப்பினர் பா.செ குணசேகரன், பாஸ்கர், ராமஜெயம், நமச்சிவாயம், நகர செயலாளர் அறிவழகன், மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் கவிஞர்கள் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments