தென்காசி மாவட்டத்தில் விபத்து, ஒலி, மாசற்ற தீபாவளி கொண்டாடுவீர்..... மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.....


தென்காசி மாவட்டத்தில் விபத்து, ஒலி, மாசற்ற தீபாவளியைக்கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து  அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி திருநாளில் பட்டாசுகளை வெடிப்பதால் நிலம், நீர், காற்று ஆகியவை மாசடைகின்றன. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தீபாவளி பண்டிகை அன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படியே பட்டாசுகளை பொதுமக்கள் வெடிக்க வேண்டும்.

மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன்அனுமதியு டன் பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி பட்டாசுகளை வெடிக்க அந்தந்தப் பகுதிகளில் உள்ள நலச் சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். சரவெடிகளைத் தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள்,வழிபாட்டுத் தலங்கள்,அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை, எளிதில் தீப்பற்றும் இடங்களின் அருகே பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

எனவே, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையிலும், அறி விக்கப்பட்ட நேரத்திலும் பட்டாசுகளை வெடித்து, தீபாவளியை மாசற்ற தீபாவளியாகக் கொண்டாட தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது .

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments