இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டியில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக கில், ரோகித் சர்மா களமிறங்கினர். தொடக்கத்தில் ரோகித் சர்மா 8 ரன்களில் ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் கில் 10 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
இதனால் இந்திய அணி 8.5 ஓவர்களில் 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டள்ளது . மழை நின்ற பின் போட்டி மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments