கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

 


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு (100) மீண்டும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் திடீர் மூச்சுத் திணறல் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மூத்த மருத்துவர்கள் தலைமையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதில் உடல்நிலை முன்னேற்றம் அடைந்த நிலையில், கடந்த அக்டோபர் 10ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், நல்லகண்ணுவை அவசரமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு மருத்துவமனையில் மூத்த நிபுணர் மருத்துவர்கள் குழுவினர் கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments