ஸ்ரீவில்லிபுத்தூர் மது விலக்கு பிரிவு காவல் துறையால் கைப்பற்றப்பட்ட 5742 மதுபாட்டில்கள் கிழே கொட்டி அழிப்பு


விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து  மாவட்ட  மதுவிலக்கு காவல்துறையினர்   ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் ஸ்ரீ வில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்ட போது சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த 5742 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யபட்டிருந்தது.

 இதனையடுத்து வழக்கு பதிவு செய்து  கைப்பற்றி கொண்டு வரப்பட்ட 5742 மதுபான பாட்டில்களை உதவிய ஆணையர் அமிர்தலிங்கம், மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் மதுபான பாட்டில்களை திறந்து கீழே ஊற்றி அழித்தனர்.

இந்த நிகழ்வின் போது வருவாய் மற்றும் காவல்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments