ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு - MAKKAL NERAM

Breaking

Sunday, September 17, 2023

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

 


16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன.இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 நாடுகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன. சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியா (2 வெற்றி, ஒரு தோல்வி), இலங்கை (2 வெற்றி, ஒரு தோல்வி) தலா 4 புள்ளிகள் பெற்றன. ரன்-ரேட் அடிப்படையில் இந்தியா முதலிடமும், இலங்கை 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின.ரன்-ரேட் அடிப்படையில் வங்காளதேசம் (ஒரு வெற்றி, 2 தோல்வி) 3-வது இடமும், பாகிஸ்தான் (ஒரு வெற்றி, 2 தோல்வி) 4-வது இடமும் பெற்று நடையை கட்டின. இந்த போட்டி தொடரில் நேற்று ஓய்வு நாளாகும்.இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இன்று இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதையடுத்து இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment