குத்தாலம் மற்றும் சுற்று வட்டார பகுதி வாணவெடி தயாரிப்பு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மூவலூர் மற்றும் திருவாலங்காட்டில் உள்ள 4 நாட்டு மருந்து வெடிகள் மற்றும் வாணவெடி தயாரிப்பு செய்யப்படும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை திடீர் ஆய்வு மேற்கொண்டார் தற்போது தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தீ விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து நாட்டு வெடி தயாரிக்கப்படும் வெடி கடைகள் மற்றும் தயாரிப்பு நிலையங்களில் உள்ள வெடி மருந்துகள் மற்றும் பட்டாசுகளின் தரம்,எடை உள்ளிட்டவை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார் அதனைத் தொடர்ந்து வெடிக்கடை உரிமையாளர்களிடம் வெடிகள் தயாரிக்கப்படும் இடங்களில் கதவுகள் மரத்தல் செய்யப்பட்டிருக்க வேண்டும், அலுமினிய வாளிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும், வெடி மருந்துகள் உள்ள அறையில் மின்சாரம் இருக்கக் கூடாது,வாடிக்கையாளர்கள் தேவைக்கு அதிகமான பட்டாசுகளை வாங்கினால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும்,பட்டாசு விற்பனையாளர்கள் மற்றும் பட்டாசு தயாரிப்பு உரிமையாளர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை அறிவுறுத்தினார் இந்த ஆய்வின் போது மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா, மயிலாடுதுறை காவல் துணைக்கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமார், குத்தாலம் தாசில்தார் இந்துமதி, தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சீனிவாசன்,ரமேஷ்,உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
No comments