தமிழிசையின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுகொண்டாதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தற்போது ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை சி.பி.ராதாகிருஷ்ணன் இருமாநிலங்களையும் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment