பிரதமர் மோடியை கண்டு பாகிஸ்தான் பயப்படுகிறது...... மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடி......
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பிரதமர் மோடியின் தலைமையில் பாகிஸ்தான் பயப்படுவதாக கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின், மத்திய அரசு அப்பகுதியில் அமைதியையும் வளர்ச்சியையும் மேம்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் பாகிஸ்தான் எல்லை தாண்டிய தாக்குதல்களை நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்கு வந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
அமித்ஷா மேலும் கூறியதாவது, முந்தைய ஆட்சியாளர்கள் பாகிஸ்தானிடம் அச்சம் கொண்டிருந்த நிலையில், மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. கடந்த காலத்தில் எல்லை தாண்டி நடந்த துப்பாக்கிச் சூடுகளை தற்போது கண்டவாறு காண முடியாது. இது பிரதமர் மோடியின் வலுவான நடவடிக்கைகள் காரணமாகவே முடிந்ததாகவும் அவர் கூறினார்.
காஷ்மீர் இளைஞர்களின் கைகளில் இருந்த துப்பாக்கிகளையும், கற்களையும் பா.ஜ.க அரசு பறித்து, அவர்களுக்கு வளர்ச்சி, கல்வி போன்ற நல்லவற்றை வழங்கியுள்ளது. இதனால் ஜம்மு-காஷ்மீரில் அமைதி நிலவுகிறது.
No comments