திருக்குவளை அருகே ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 23 ஆம் ஆண்டு திருவிழா..... சந்தனக்காப்பு அலங்காரம்
நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம் சூரமங்கலம் கூத்தன்பத்து பகுதியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீ காத்தவராயன், ஸ்ரீ கன்னிமார்கள், ஸ்ரீ பெரியநாயகி மற்றும் ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆகியோர் பரிவார தெய்வங்களாக அமைந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இக்கோயிலின் 23 ஆம் ஆண்டு திருவிழா கடந்த ஜூன் 13ஆம் தேதி சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் துவங்கியது. தொடர்ந்து மதியம் கஞ்சி வார்த்தலும் இரவு வான வேடிக்கையுடன் சக்தி கரகம் எடுத்து நிகழ்வு நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான சனிக்கிழமை அம்மனுக்கு பல்வேறு வகை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் சந்தன காப்பு அலங்காரம் சாத்தப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு திரையிசை தெம்மாங்கு கானா பாடல் நடனத்துடன் கூடிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கீழ்வேளூர் தாலுகா நிருபர் த. கண்ணன்
No comments