ஜம்மு காஷ்மீர் எல்லையில் துப்பாக்கிச்சண்டை..... 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்..... - MAKKAL NERAM

Breaking

Saturday, August 9, 2025

ஜம்மு காஷ்மீர் எல்லையில் துப்பாக்கிச்சண்டை..... 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்.....

 


ஜம்மு–காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், பயங்கரவாதிகளை ஒழிக்க இந்திய பாதுகாப்பு படைகள் கடந்த 8 நாட்களாக நடத்தி வரும் தீவிர தேடுதல் மற்றும் வளையச்சோதனை நடவடிக்கைகள் இன்று (ஆகஸ்ட் 9) அதிகாலையில்  மோதலாக முடிந்தது.


அதிகாலையில் நடந்த கடும் துப்பாக்கிச்சண்டையில், இந்திய ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்ததுடன், 6 பேர்  காயமடைந்ததாக தகவல். எல்லை பகுதியில் தொடர்ச்சியாக நிலவும் இந்த பதற்றமான சூழ்நிலை காரணமாக, பாதுகாப்பு படைகள் கூடுதல் படைகளை குவித்து, காட்டுப்பகுதிகளை முற்றுகையிட்டு, ட்ரோன் மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு உபகரணங்களுடன் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றன.

No comments:

Post a Comment