விநாயகர் சதுர்த்தி விடுமுறை...... கொண்டாட்டத்தில் ஆம்னி பேருந்துகள்...... திண்டாடத்தில் பயணிகள்......

 


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஏராளமானவர்கள் தனியார் பேருந்துகளை நாடுகிறார்கள். இதனை பயன்படுத்திக் கொண்ட சில பேருந்து நிறுவனங்கள், அச்சமூட்டும் அளவிற்கு டிக்கெட் கட்டணங்களை உயர்த்தி உள்ளன. குறிப்பாக,ஆம்னி பேருந்துகளில் ₹800 ஆக இருந்த கட்டணம் தற்போது ₹2000 வரை வசூலிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


இருக்கையில் பயணிக்க அதிகபட்சமாக ₹1320- ம், படுத்துக்கொண்டு பயணிக்க ₹4000 வரை கட்டணம் உயர்ந்துள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், சென்னை முதல் திருச்சிக்கு ₹2500 வரை கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மக்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அதிகாரிகள் இந்த கட்டண மோசடிக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

Post a Comment

0 Comments