அந்தியூர் சட்டமன்ற தொகுதி சென்னம்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Friday, August 22, 2025

அந்தியூர் சட்டமன்ற தொகுதி சென்னம்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது


ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற  தொகுதி , அம்மாபேட்டை  ஊராட்சி ஒன்றியம் ,  சென்னம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு  பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அந்தியூர் வட்டாட்சியர்  கவியரசு ,  அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்  மணிமேகலை , ஒன்றிய அவைத் தலைவர்  ஏ.ஆர்.எஸ். சுப்பிரமணியம்  ,ஒன்றிய துணை செயலாளர்  கண்ணுசாமி , மாவட்ட பிரதிநிதி  சந்திரன் , காமராஜ்,  மணி ,  மகேந்திரன்  மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.






No comments:

Post a Comment