நாகப்பட்டினம் மாவட்ட ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட குழு கூட்டம் 28.10.2023 சனிக்கிழமை காலை நாகப்பட்டினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அ.தி.அன்பழகன் ( தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்) கு.சரவணன் ( உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்) மற்றும் சி.முத்துசாமி ( தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி) ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் இரமேஷ் ( தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ) சரவணன் ( தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்), , கணேசன் ( நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம்) செந்தில்குமார் ( தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), செல்வம் ( தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு), ரவிச்சந்திரன் ( அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர்), பாலசுப்ரமணியன் ( தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்), வே.சித்ரா ( தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் ), வளர்மாலா ( தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம்), பா.ராணி ( தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம்) , ப.அந்துவன்சேரல் ( தமிழ்நாடு புள்ளிஇயல் சார் நிலை அலுவலர் சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு முடிவின்படி, புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வர வேண்டும்.சரண் விடுப்பு ஒப்படைப்பு மீண்டும் வழங்கிட வேண்டும்.
உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், 2002 முதல் 2004 தொகுப்புஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட பணிக்காலத்தை வரண்முறைசெய்திட வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிகாலமாக வரைமுறைப்படுத்த வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக் குழுவில் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 01.11.23 அன்று நாகப்பட்டினம் அவுரித்திடலில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
இறுதியாக சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அருளேந்திரன் நன்றியுரையாற்றினார்.
நாகை மாவட்ட நிருபர் சக்கரவர்த்தி
புகைப்பட நிருபர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment