• Breaking News

    நாமக்கல் அருகே குடிநீர் நிறம் மாறி வருவதாக வீடியோ வைரலானதால் பரபரப்பு


     நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் களியனூர் பஞ்சாயத்து பகுதியில், பனிரெண்டாம் வார்டு சுபாஷ் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது.. இந்நிலையில் பொது மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கக்கூடிய சுபாஷ் நகர் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து கழிவுநீர் கலந்து நிறம் மாறி குடிநீர் வெளியேறுவதாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியானது .

    மேலும் அதில் சுகாதாரமற்ற நிலையில் குடிநீர் வழங்கப்படுவதாகவும் அந்த வீடியோவை எடுத்த நபர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து களியனூர் ஊராட்சி மன்ற தலைவர் ரவி அவர்களிடம் கேட்ட பொழுது களியனூர் பஞ்சாயத்து 12-ஆம் வார்டு சுபாஷ் நகர் பகுதியில் சமீபத்தில் குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது .

    அதன் அடி வண்டல் மண்,மற்றும் தொட்டி சுத்தம் செய்யபட்டதால் கழிவுகள்  குடிநீர் இணைப்புகளில் தேங்கி இருந்ததால், குடிநீர் சப்ளை கொடுத்தவுடன் 10 நிமிடம் குடிநீர் நிறம் மாறி வந்துள்ளது.. இந்நிலையில் இந்த சூழலை பயன்படுத்தி தனிநபர் ஒருவர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறம் மாறி வந்த அந்த குடிநீரை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.. மேலும் இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள வார்டு உறுப்பினர் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. எனவே பொய்யான  அந்த வீடியோவை பகிர்வதை தவிர்க்க வேண்டும்.

     இது குறித்து புகார்கள் இருப்பின் எப்போது வேண்டுமானாலும் பஞ்சாயத்து தலைவரான என்னை அணுகலாம் என குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் பொழுது களியனூர் பகுதியில் ஏராளமான சாயப்பட்டறைகள் இயங்குவதால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனே குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர்.

     எனவே மாதம் ஒருமுறை அதிகாரிகள் களியனூர் பகுதியில் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டால் பொதுமக்கள் அச்சமின்றி குடிநீரை பயன்படுத்துவார்கள் என தெரிவித்தனர்.


    ஜெ.ஜெயக்குமார் 9942512340 

    நாமக்கல் மாவட்டம்


    No comments