தொடர் விடுமுறை..... திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - MAKKAL NERAM

Breaking

Saturday, November 2, 2024

தொடர் விடுமுறை..... திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்


 தீபாவளி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக காலை முதல் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

இதனால் இலவச தரிசனத்திற்காக 24 மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.மேலும், திருமலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்கள் நிரம்பி, வெளியே சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இலவச தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது.அதேசமயம் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து ஏழுமலையானை வழிபட்டு செல்கின்றார்.

திருப்பதி ஏழுமலையானை நேற்று ஒரே நாளில் 67 ஆயிரத்து 785 பக்தர்கள் வழிபட்டதுடன், கோயில் உண்டியலில் 2 கோடியே 38 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தி உள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment